தஞ்சாவூர்
பெரியகோயில் உண்டியலில் ரூ.18.35 லட்சம் காணிக்கை
தஞ்சாவூர் பெரியகோயிலில் உள்ள உண்டியல்கள் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில்
தஞ்சாவூர் பெரியகோயிலில் உள்ள உண்டியல்கள் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில் பக்தர்கள் ரூ. 18.35 லட்சம் காணிக்கையாகச் செலுத்தியிருப்பது தெரிய வந்தது.
இக்கோயிலில் மொத்தம் 11 உண்டியல்கள் உள்ளன. இவை அறநிலையத் துறை உதவி ஆணையர் ஜெ. பரணிதரன், செயல் அலுவலர் மாதவன் உள்ளிட்டோர் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை காலை திறக்கப்பட்டன. இவற்றை எண்ணும் பணியில் கோயில் பணியாளர்கள் உள்பட சுமார் 25 பக்தர்கள் பங்கேற்றனர். காலையில் தொடங்கிய இப்பணி மாலை வரை நடைபெற்றது. இதில், பக்தர்கள் 18 லட்சத்து 35 ஆயிரத்து 172 ரூபாய் காணிக்கையாகச் செலுத்தியிருப்பது தெரிய வந்தது. மேலும், 186 வெளிநாட்டு நோட்டுகளும் பக்தர்கள் செலுத்தியுள்ளனர்.