பாபநாசம் அருகே சைக்கிளிலிருந்து கீழே விழுந்ததில் காயமடைந்த முதியவர் மருத்துவமனையில் புதன்கிழமை உயிரிழந்தார்.
கபிஸ்தலம் காவல் சரகம், உள்ளிக்கடை கிராமம், மாதாகோவில் தெருவை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி (65). கூலித் தொழிலாளி. இவர் செவ்வாய்க்கிழமை இரவு சைக்கிளில் திருவையாறு-கும்பகோணம் பிரதான சாலையில் ஆடுதுறை பெருமாள் கோயில் சென்று கொண்டிருந்தார். அப்போது, சைக்கிளிலிருந்து நிலைதடுமாறி கீழே விழந்த ஆரோக்கியசாமியை அக்கம்பக்கத்தினர் மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ஆரோக்கியசாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவம் குறித்து ஆரோக்கியசாமி மகன் கிறிஸ்டோபர் அளித்த புகாரின்பேரில் கபிஸ்தலம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.