பாபநாசம் எல்.ஐ.சி.அலுவலகத்தில் எல்ஐசி முகவர் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு எல்.ஐ.சி. பாபநாசம் கிளை மேலாளர் மதியழகன் தலைமை வகித்தார். கும்பகோணம் கிளை மேலாளர் சங்கர் கலந்து கொண்டு, எல்.ஐ.சி.யின் புதிய திட்டங்கள் குறித்து விளக்கி பேசினார். கூட்டத்தில் வளர்ச்சி அதிகாரிகள் ஜெய்சங்கர், சங்கரி, உதவி நிர்வாக அலுவலர் நா.ரெத்தினவேல் மற்றும் முன்னோடி முகவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிறைவில் கும்பகோணம் உதவி கிளை மேலாளர் (விற்பனை)மதன்குமார் நன்றி கூறினார்.