மத்திய அரசின் 2019 ஆம் ஆண்டுக்கான ஜீவன் ரக்ஷா விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பது:
நீரில் மூழ்கிய நபரைக் காப்பாற்றுதல், மின்சார விபத்துகள், தீ விபத்துகள், நிலச்சரிவு விலங்கின தாக்குதல், சுரங்க மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு, மனித உயிர்களை மீட்பவர்களுக்கு ஜீவன் ரக்ஷா விருது மத்திய அரசின் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.
மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளவர்களைப் போராடி உயிர்களைக் காப்பாற்றுவதில் துணிச்சலாக செயல்பட்டதற்கு சர்வோதம் ஜீவன் ரக்ஷா விருது வழங்கப்படுகிறது.
துணிச்சலுடன் தாமதமின்றி செயல்பட்டு மிகப் பெரிய ஆபத்து சூழ்நிலைகளில் உயிர்களைக் காப்பாற்றுவதில் துணிச்சலாகச் செயல்பட்டதற்கு உத்தம் ஜீவன் ரக்ஷா விருது உடனடியாக வழங்கப்படுகிறது.
தனக்கு காயம் ஏற்பட்டாலும், வீரத்துடன் தாமதமின்றி செயல்பட்டு உயிரைக் காப்பாற்றுபவர்களுக்கு ஜீவன் ரக்ஷா விருது வழங்கப்படுகிறது.
இந்த விருது பெறுவதற்கான விண்ணப்பங்கள் மற்றும் இதர விவரங்கள் www.jrp.mha.gov.in, www.sopu@nic.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த விருதுக்கான விண்ணப்பங்களை நிறைவு செய்து 3 பிரதிகளுடன் ஜூலை 8-ம் தேதிக்குள் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், அன்னை சத்யா விளையாட்டரங்கம், தஞ்சாவூர் என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலவலக முகவரியில் அலுவலக வேலை நாள்களில் நேரிலோ அல்லது தொலைபேசியிலோ (04362 - 235633) தொடர்பு கொள்ளலாம்.