கும்பகோணம் மகாமகக் குளத்தில் புதன்கிழமை தவறி விழுந்த நபர் உயிரிழந்தார்.
காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் நரசிம்மன் (50). கும்பகோணம் மற்றும் சுற்றுப்பகுதியிலுள்ள கோயில்களுக்குச் சென்ற இவர் புதன்கிழமை மகாமகக் குளத்துக்கு வந்தார். அப்போது படிக்கட்டிலிருந்து நரசிம்மன் தவறி விழுந்தார். இதை யாரும் கவனிக்காததால், வியாழக்கிழமை காலையில் குளத்துக்குக் குளிப்பதற்காகச் சென்றவர்கள், நரசிம்மன் சடலம் மிதப்பதைப் பார்த்தனர். இதுகுறித்து மேற்கு போலீஸார் விசாரித்தனர்.