கணபதியக்ரஹாரம் பள்ளி ஆண்டு விழா

பாபநாசம் வட்டம், கணபதியக்ரஹாரம் மகாகணபதி உதவி பெறும் நடுநிலைப்பள்ளியின் ஆண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. 


பாபநாசம் வட்டம், கணபதியக்ரஹாரம் மகாகணபதி உதவி பெறும் நடுநிலைப்பள்ளியின் ஆண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. 
விழாவிற்கு கணபதியக்ரஹாரம் ஊராட்சி மன்ற  முன்னாள் தலைவர் ராஜேஸ்வரி கருணாகரன்  தலைமை வகித்தார். முகவர் சின்னதுரை முன்னிலை வகித்தார். பள்ளியின் தலைமை ஆசிரியர் குணசேகரன் ஆண்டறிக்கை வாசித்தார். இந்தியன் வங்கி கிளை மேலாளர் திலீப் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வென்ற பள்ளி மாணவ, மாணவிளுக்கு பரிசுகள் வழங்கி பேசினார். தொடர்ந்து மாணவ,மாணவிகள் பங்கேற்ற பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் கல்வி குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள், மாணவ,மாணவிகள் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக,  பள்ளிச் செயலர் கருணாகரன் வரவேற்றார். நிறைவில் ஆசிரியை திவ்யா நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com