பாபநாசம் வட்டாரப் பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் சனிக்கிழமை வாகனச் சோதனை மேற்கொண்டனர்.
கும்பகோணம்-தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் திருப்பாலைத்துறை, உத்தாணி கிராமங்களில் வட்டார வளர்ச்சி அலுவலர் சாமிநாதன் தலைமையில், காவல் உதவி ஆய்வாளர் சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் அடங்கிய தேர்தல் பறக்கும் படை குழுவினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். இந்த வழியாக வந்த வாகனங்கள் அனைத்தும் சோதனையிடப்பட்டன. அப்போது இவ்வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனையிட்ட போது உரிய ஆவணங்களுடன் மசாலா பொட்டலங்கள் இருந்தன. சோதனைக்குப் பின்னர் லாரி அனுப்பப்பட்டது.