பாபநாசம் கிளைச் சிறை நூலகத்துக்கு நூல்கள் அளிப்பு

தஞ்சாவூர்  மாவட்டம், பாபநாசம் கிளைச் சிறையில் இயங்கும் கைதிகளுக்கான நூலகத்திற்கு பாபநாசம்

தஞ்சாவூர்  மாவட்டம், பாபநாசம் கிளைச் சிறையில் இயங்கும் கைதிகளுக்கான நூலகத்திற்கு பாபநாசம் நீதிபதி எஸ். ராஜசேகர், லயன்ஸ் சங்கத்தினர் வழங்கிய நூல்களை நன்கொடையாக வழங்கினார்.
பாபநாசம் கிளைச் சிறையில் விசாரணைக் கைதிகளுக்காக இயங்கும் நூலகத்திற்கு பாபநாசம் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் நன்கொடையாக வழங்கிய நூல்களை கிளை சிறை அதிகாரியிடம் பாபநாசம் வட்ட சட்டப் பணிகள் குழு தலைவரும், பாபநாசம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர்மன்ற நீதிபதியுமான எஸ்.ராஜசேகர் நன்கொடையாக வழங்கினார். இதில் லயன்ஸ் சங்க நிர்வாகிகள், பாபநாசம் வட்ட சட்ட பணிகள் குழு தன்னார்வலர்கள்  எஸ். பி.ராஜேந்திரன், எஸ். தனசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com