பட்டுக்கோட்டையில் இன்று மின் நிறுத்தம்

பட்டுக்கோட்டை  பகுதிகளில் சனிக்கிழமை (மே 4) மின்சார விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

பட்டுக்கோட்டை  பகுதிகளில் சனிக்கிழமை (மே 4) மின்சார விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பட்டுக்கோட்டை மின் வாரிய உதவி செயற்பொறியாளர்  பி.லெட்சுமணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பது:           
பட்டுக்கோட்டை  துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், இங்கிருந்து மின்சாரம் பெறும் பட்டுக்கோட்டை நகர்-1,  நகர்-2,  நகரியம், பண்ணைவயல், சூரப்பள்ளம், சூரங்காடு, வீரக்குறிச்சி, குறிச்சி,  பாளமுத்தி ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை காலை 9.45 மணி முதல் மாலை 4.45 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது.
இதேபோல, கரம்பயம் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், இங்கிருந்து மின்சாரம் பெறும் ஆலத்தூர், கிளாமங்களம், கரம்பயம், செண்டாங்காடு, முசிறி ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை காலை 9.45 மணி முதல் மாலை 4.45 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com