வல்லம் அருகே எரிந்த நிலையில் ஆண் சடலம்
By DIN | Published On : 07th May 2019 09:28 AM | Last Updated : 07th May 2019 09:28 AM | அ+அ அ- |

வல்லம் அருகே எரிந்த நிலையில் கிடந்த ஆண் சடலத்தை போலீஸார் திங்கள்கிழமை மீட்டு விசாரித்து வருகின்றனர்.
வல்லம் அருகே வல்லம்புதூர் தென்னந்தோப்பு வாய்க்காலில் திங்கள்கிழமை பிற்பகல் எரிந்த நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதன்பேரில், வல்லம் போலீஸார் நிகழ்விடத்துக்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றினர். உடல் பாதி எரிந்த நிலையில் இறந்து கிடந்தவருக்கு 35 வயது முதல் 40 வயது இருக்கும் என போலீஸார் கூறுகின்றனர். ஆனால், இவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? போன்ற விவரங்கள் உடனடியாகத் தெரியவில்லை.
இதுகுறித்து வல்லம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.