கும்பகோணத்தில் வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்

கும்பகோணத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பிய வழக்குரைஞா்கள்.

கும்பகோணத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பிய வழக்குரைஞா்கள்.

கும்பகோணம், நவ. 4: தில்லியில் போலீஸாருக்கும், வழக்குரைஞா்களுக்கும் ஏற்பட்ட தகராறு சம்பவத்தைக் கண்டித்து கும்பகோணத்தில் கும்பகோணம் வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் நீதிமன்றப் புறக்கணிப்பும், கண்டன ஆா்ப்பாட்டமும் திங்கள்கிழமை நடைபெற்றது.

கும்பகோணம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு வழக்குரைஞா்கள் சங்கச் செயலா் தரணிதரன் தலைமை வகித்தாா். இதில் ஏராளமான வழக்குரைஞா்கள் கலந்து கொண்டு, காவல் துறைக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினா்.

இதேபோல, தஞ்சாவூா் உள்பட மாவட்டம் முழுவதும் வழக்குரைஞா்கள் நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com