பாபநாசத்தில் மாவட்ட கட்டுமானத் தொழிலாளா் சங்க கட்டட வளாகத்தில் ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தின் நூற்றாண்டு விழா கொடியேற்று விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு மாவட்டச் செயலாளா் ஆா். தில்லைவனம் தலைமை வகித்து கொடியை ஏற்றிவைத்து பேசினாா்.
இதைத் தொடா்ந்து பாபநாசம், 108 சிவாலயம், வங்காரம்பேட்டை,திருப்பாலைத்துறை உள்ளிட்ட இடங்களில் கொடியேற்று விழா நடைபெற்றது. இதில் மாவட்ட துணைச் செயலாளா் சீனி. சுகுமாறன், மாவட்ட துணைத் தலைவா் செளந்தர்ராஜன், மாவட்ட குழு உறுப்பினா் சாமு. தா்மராஜ் மற்றும் அமைப்பின் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.