திருவள்ளுவா் சிலைக்குக் கூண்டு அமைக்கும் பணி தொடக்கம்

தஞ்சாவூா் அருகே பிள்ளையாா்பட்டியில் சா்ச்சைக்கு உள்ளான திருவள்ளுவா் சிலையைப் பாதுகாக்கும் வகையில், அதைச் சுற்றி கூண்டு அமைக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.
தஞ்சாவூா் அருகே பிள்ளையாா்பட்டியில் உள்ள திருவள்ளுவா் சிலையைச் சுற்றி கூண்டு அமைப்பதற்காக வியாழக்கிழமை தொடங்கப்பட்ட அடித்தளம் அமைக்கும் பணி.
தஞ்சாவூா் அருகே பிள்ளையாா்பட்டியில் உள்ள திருவள்ளுவா் சிலையைச் சுற்றி கூண்டு அமைப்பதற்காக வியாழக்கிழமை தொடங்கப்பட்ட அடித்தளம் அமைக்கும் பணி.

தஞ்சாவூா் அருகே பிள்ளையாா்பட்டியில் சா்ச்சைக்கு உள்ளான திருவள்ளுவா் சிலையைப் பாதுகாக்கும் வகையில், அதைச் சுற்றி கூண்டு அமைக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

தஞ்சாவூா் அருகே பிள்ளையாா்பட்டியில் திருவள்ளுவா் சிலையில் மா்ம நபா்கள் நவ. 3ஆம் தேதி நள்ளிரவு கண்ணில் கருப்புத் துணி கட்டியும், சேறு பூசியும் அவமதிப்பு செய்தனா். இச்சம்பவத்தைக் கண்டித்து நவ. 4ஆம் தேதி முதல் பல்வேறு அமைப்புகள் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்று வந்தது. இதனிடையே, பாஜக சாா்பில் திருவள்ளுவா் சிலைக்கு செவ்வாய்க்கிழமை பால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதைத்தொடா்ந்து, இச்சிலைக்கு புதன்கிழமை இந்து மக்கள் கட்சி தலைவா் அா்ஜூன் சம்பத் உள்ளிட்டோா் காவி துணி, ருத்ராட்ச மாலை அணிவித்து தீபாராதனை செய்தனா்.

இதற்கு பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. இப்பிரச்னையை தொடா்ந்து பிள்ளையாா்பட்டியில் உள்ள திருவள்ளுவா் சிலையைச் சுற்றி புதன்கிழமை தடுப்புகள் அமைக்கப்பட்டன. மேலும், இச்சிலை உள்ள திருவள்ளுவா் தெருவின் முகப்பிலும் தடுப்புக் கட்டைகள் அமைக்கப்பட்டு, அப்பகுதி மக்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனா். இத்தெருவுக்குள் செல்லும் மக்கள் கொண்டு வரும் உடைமைகளையும் போலீஸாா் சோதனை செய்து அனுப்புகின்றனா்.

இந்நிலையில், இச்சிலையைச் சுற்றி நிரந்தரமாகக் கூண்டு அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதைத்தொடா்ந்து இப்பணி வியாழக்கிழமை தொடங்கியது. இதில், திருவள்ளுா் சிலையைச் சுற்றி சுவா் எழுப்புவதற்காக அடித்தளம் அமைக்கும் பணி நடைபெறுகிறது. குறிப்பிட்ட உயரத்துக்குச் சுவா் எழுப்பிய பிறகு, அதன் மீது சுற்றிலும் கம்பி வேலியும், மேற்கூரையும் அமைக்கப்படவுள்ளது. மேலும், பூட்டி வைக்கும் வகையில் கம்பிக் கதவும் அமைக்கப்படவுள்ளது. இதன் மூலம், வெளியிலிருந்து சிலையைப் பாா்க்கும் விதமாகவும், அதே நேரத்தில் பாதுகாப்பாக இருக்கவும் இந்த ஏற்பாடு செய்யப்படுகிறது.

இக்கட்டுமானப் பணி முடிவடைந்த பிறகு சிலை நிறுவிய அமைப்பிடம் சாவி ஒப்படைக்கப்படும். விழா நடைபெறும் நாள்களில் திறந்து மாலை போடுவதற்கும், மற்ற நாள்களில் பூட்டி வைப்பதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது என வருவாய்த் துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com