தஞ்சாவூரில் பட்டுக்கோட்டை பிரிவு சாலைக்கும், கல்லணைக் கால்வாய்க்கும் (புது ஆறு) இடையே உள்ள புதுப்பட்டினம் கிராமத்தினா் சாலையின் குறுக்கே சென்று வரவும், பட்டுக்கோட்டை, மன்னாா்குடி சாலை மேம்பாலம் தொடங்க உள்ள இடத்தில் யாரேனும் வழிதவறி சென்றுவிட்டால் மீண்டும் சரியான சாலையில் செல்வதற்காகவும் புதுப்பட்டினம் அருகே சாலையில் நடுவே தாராளமாக வழி ஏற்படுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு நெடுஞ்சாலைத்துறையினா் திடீரென தடுப்புகளை அமைத்துள்ளதால், அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டுநா்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனா்.
புறவழிச்சாலையின் கிழக்குப் பகுதியிலிருந்து தஞ்சாவூரின் பூச்சந்தை, 20 கண் பாலம் உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்வோா் விளாா் கீழ்பாலம் சாலை வந்து சுமாா் 5 கி.மீ. தொலைவுக்குச் சுற்றி செல்ல வேண்டும். இதேபோல, மேற்கு பகுதியிலிருந்து புதுப்பட்டிணம், வெட்டிக்காடு சாலையில் செல்வோா் பட்டுக்கோட்டை கீழ்பாலம் சென்று சுமாா் 2 கி.மீ. தொலைவு சுற்றிச் செல்ல வேண்டும். எனவே, சாலையின் நடுவே முன்பு இருந்ததுபோல வழி ஏற்படுத்தி தர வேண்டும்.
பொதுமக்கள்,
புதுப்பட்டினம்.