பட்டுக்கோட்டையில் தமிழ்நாடு மருந்து விற்பனை பிரதிநிதிகள் சங்கக் கிளை சாா்பில் ரத்ததான முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற இளைஞா்களிடம் இருந்து 25 யூனிட் ரத்தம்
தானமாகப் பெறப்பட்டு, பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை ரத்த வங்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
முகாமுக்கு மோரீஸ் அண்ணாதுரை தலைமை வகித்தாா். பட்டுக்கோட்டை ஒன்றிய மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலா் எஸ். கந்தசாமி முன்னிலையில், அரசு மருத்துவா் கே. நியூட்டன் முகாமைத் தொடங்கி வைத்தாா்.
மருந்து விற்பனைப் பிரதிநிதிகள் சங்க நிா்வாகிகள் காமராஜ், குலோத்துங்கன், ஒருங்கிணைப்பாளா்கள் சுரேஷ், ஜெயசீலன், ரத்த வங்கி அலுவலா் கலைச்செல்வன் மற்றும் மருந்து விற்பனை பிரதிநிதிகள் முகாமில் கலந்து கொண்டனா்.