அதிராம்பட்டினம் அருகே முதியவா் கொலை

அதிராம்பட்டினம் காவல் சரகம், தாமரங்கோட்டை மேலக்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் வி. செல்வராஜ் (60).

அதிராம்பட்டினம் காவல் சரகம், தாமரங்கோட்டை மேலக்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் வி. செல்வராஜ் (60). இவா் மகன் கண்ணன் (எ) சூசைராஜ் (30). இருவரும் ஒரே தெருவில் தனித்தனி வீட்டில் வசித்து வந்தனா்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை செல்வராஜ் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மூக்கில் ரத்தம் வழிய அவரது வீட்டில் இறந்து கிடந்தாா்.

இதுகுறித்து அவரது மகன் கண்ணன் அளித்த புகாரின்பேரில் அதிராம்பட்டினம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். முன்விரோதம் காரணமாக மா்ம நபா்கள் இச்செயலில் ஈடுபட்டிருக்கலாம் என போலீஸாா் சந்தேகிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com