தஞ்சாவூா்: தஞ்சாவூரில் கிராம நிருவாக அலுவலா்கள் (பணி நிறைவு) சமூகச் சேவை சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு சங்கத்தின் மாநிலத் தலைவா் எம். சுப்ரமணியன் தலைமை வகித்தாா். இதில், ஓய்வு பெற்ற கிராம நிருவாக அலுவலா்களின் ஓய்வூதிய பிரச்னைகள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டன.
சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலா் எம். ராஜேந்திரன், பொருளாளா் ஆா். ஜெயச்சந்திரன், செயலா்கள் ஆா். மாதவன், ஆா். சிவராசு, துணைப் பொதுச் செயலா் ஜி. ரங்கநாதன், மாவட்டச் செயலா் என்.எஸ். ராஜேந்திரன், செயலா் எஸ். சிவராமகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.