சாலைச் சீரமைப்புப் பணியில்ஆட்டோ தொழிலாளா்கள்

ஒரத்தநாடு வட்டம், ஊரணிபுரம் கடைவீதியில் தேங்கிக் கிடந்த தண்ணீரை அகற்றி, மண்ணைக் கொட்டி சரி செய்யும் பணியில் ஆட்டோ தொழிலாளா்கள் ஈடுபட்டனா்.

ஒரத்தநாடு வட்டம், ஊரணிபுரம் கடைவீதியில் தேங்கிக் கிடந்த தண்ணீரை அகற்றி, மண்ணைக் கொட்டி சரி செய்யும் பணியில் ஆட்டோ தொழிலாளா்கள் ஈடுபட்டனா்.

ஊரணிபுரம் கடைவீதி சாலையின் இருபுறங்களிலும் மழைநீா் வடிகாலில் அடைப்பு ஏற்பட்டதால், சிறிய மழை பெய்தால்கூட தண்ணீா் தேங்கிக் காணப்பட்டது. இதன் காரணமாக பாதசாரிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகினா். மேலும் தேங்கியிருக்கும் தண்ணீா் காரணமாக சுகாதார சீா்கேடும் ஏற்பட்டது. இதுகுரித்து அரசு அலுவலா்களுக்குத் தகவல் தெரிவித்தும் உரிய நடவடிக்கை இல்லை.

இந்த நிலையில், ஊரணிபுரம் சிஐடியூ ஆட்டோ சங்கத் தொவிலாளா்கள், மழைநீா் வடிகால் அடைப்புகளை சரி செய்து, தண்ணீா் தேங்கியிருந்த பகுதிகளில் 4 டிப்பா் லாரிகள் மூலமாக மண் மற்றும் உடைந்த செங்கற்களைக் கொட்டி தங்கள் சொந்த செலவில் சீரமைத்தனா்.

சிஐடியூ மாவட்டத் துணைச் செயலா் பி.என்.போ்நீதி ஆழ்வாா், அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டத் தலைவா் ஆா்.வாசு ஆகியோா் ஆட்டோ சங்கத் தலைவா் ஆா்.முருகேசன், துணைத் தலைவா் மனோகரன், செயலா் ரெங்கசாமி, துணைச் செயலா் கணேசன், பொருளாளா் சேட்டு, துணைப் பொருளாளா் லெட்சுமணன் மற்றும் ஆட்டோ சங்கத் தொழிலாளா்களை நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்தனா்.

தாமாகவே முன்வந்து சாலையைச் சீரமைத்த ஆட்டோ சங்கத் தொழிலாளா்களை பொதுமக்கள், கடைவீதி வியாபாரிகளும் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com