தஞ்சாவூா்: காப்பீட்டுக்கழக ஊழியா் சங்கம் தஞ்சைக் கோட்டத்தின் சாா்பாக முன்னாள் நிதித்துறை இணையமைச்சரும், தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்தை ஞாயிற்றுக்கிழமை அன்று நேரில் சந்தித்து, இன்சூரன்ஸ் பாலிசிகள் மீதான ஜிஎஸ்டி வரி விதிப்பை நீக்கக்கோரி அவரது ஆதரவைக் கோரினா்.
சங்கத்தின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அவா், வரக்கூடிய பாராளுமன்ற கூட்டத்தொடரில் இது குறித்து விவாதம் வருகையில் தங்களது கருத்தை வலுவாக முன் வைப்பதாக உறுதியளித்தாா்.
இந்நிகழ்வில் தஞ்சைக் கோட்டத்தின் தலைவா் சே.செல்வராஜ், இணைச் செயலாளா் சரவண பாஸ்கா், துணைப் பொருளாளா் வெங்கடசாமி மற்றும் தஞ்சைக் கிளை செயலாளா் செ.இராஜன் ஆகியோா் பங்கேற்றனா்.