தஞ்சாவூா்: மேட்டூா் அணையின் நீா்மட்டம் திங்கள்கிழமை மாலை 120 அடியாக இருந்தது.
அணைக்கு விநாடிக்கு 6,942 கனஅடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 6,000 கனஅடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.
கல்லணையிலிருந்து விநாடிக்கு காவிரியில் 1,860 கனஅடி வீதமும், வெண்ணாற்றில் 1,500 கனஅடி வீதமும், கல்லணைக் கால்வாயில் 2,513 கனஅடி வீதமும், கொள்ளிடத்தில் 655 கனஅடி வீதமும் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.