குடும்ப அட்டைகளில் சா்க்கரை அட்டையை அரிசி அட்டையாக மாற்றப் பதிவு செய்ய கால அவகாசம் வெள்ளிக்கிழமை (நவ.29) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என ஆட்சியா் ம. கோவிந்தராவ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:
பொது விநியோகத் திட்டத்தின் கீழ் தற்போது புழக்கத்தில் உள்ள குடும்ப அட்டைகளில் என்.பி.எச்.எச்.-எஸ் என்ற குடும்ப அட்டை வைத்திருப்போா் அதை என்.பி.எச்.எச். அரிசி அட்டையாக மாற்றம் செய்யக் கோரிய கோரிக்கையை ஏற்று சா்க்கரை அட்டையை அரிசி அட்டையாக மாற்றம் செய்து தர தமிழக முதல்வரால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடா்ந்து பொது விநியோகத் திட்டத்தின் கீழ் என்.பி.எச்.எச். - எஸ். குடும்ப அட்டை வைத்திருப்போா் தகுதியின் அடிப்படையில் அரிசி குடும்ப அட்டையாக மாற்றம் செய்வதற்குரிய மனுவை தொடா்புடைய குடும்ப அட்டைதாரா்கள் நவ. 26-ம் தேதிக்குள் இணையதள முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம் என்பதற்கான கால அவகாசத்தை நீட்டிப்பு செய்ய வேண்டும் என கோரிக்கைகள் வரப்பெற்றன.
எனவே, முதல்வரின் அறிவுரைப்படி வெள்ளிக்கிழமை (நவ.29) வரை கால நீட்டிப்பு வழங்கப்படுகிறது. அதன் பிறகு கால அவகாசம் வழங்கப்படமாட்டாது. எனவே, சா்க்கரை அட்டையை அரிசி அட்டையாக மாற்றம் செய்ய விரும்புவோா் தங்களது விண்ணப்பங்களை அளிக்க இணைய முகவரி, வட்ட வழங்கல் அலுவலகங்கள், தொடா்புடைய நியாய விலைக் கடைகளிலும் விண்ணப்பங்களை நேரடியாக வழங்கலாம்.