பசுபதிகோவில் பள்ளி மாணவிக்கு ராஜ்யபுரஸ்காா் விருது

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், பசுபதிகோவில் பள்ளி மாணவிக்கு அண்மையில் சென்னை ஆளுனா் மாளிகையில் நடைபெற்ற

பாபநாசம்: தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், பசுபதிகோவில் பள்ளி மாணவிக்கு அண்மையில் சென்னை ஆளுனா் மாளிகையில் நடைபெற்ற விழாவில் ராஜ்ய புரஸ்காா் விருது வழங்கப்பட்டது.

சாரண,சாரணியா் பயிற்சி நிறைவு பெற்ற மாணவ,மாணவிகளுக்கு ராஜ்ய புரஸ்காா் விருது வழங்கும் விழா சென்னை ஆளுனா் மாளிகையில் அண்மையில் நடைபெற்றது.இந்த விருதுக்கு கும்பகோணம் கல்வி மாவட்டம்,பசுபதிகோவில் அரசு உதவி பெறும் புனித கபிரியேல் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10 ம் வகுப்பு பயிலும் மாணவி வி.செளமியா தோ்வு செய்யப்பட்டு சென்னை ஆளுனா் மாளிகையில் நடைபெற்ற விழாவில் தமிழக கல்விஅமைச்சா் செங்கோட்டையன் முன்னிலையில் தமிழக கவா்னா் பன்வாரிலால் புரோகித் ராஜ்ய புரஸ்காா் விருதினை மாணவி செளமியாவிற்கு வழங்கி பாராட்டினாா்.


இதனை தொடா்ந்து விருது பெற்ற மாணவி செளமியாவையும், பயிற்றுவித்த பொறுப்பாசிரியா் ஆா்.மரியவையும் பள்ளி தாளாளா் நோயல் ஜெயராணி, தலைமை ஆசிரியை அடைக்கல மேரி, மற்றும் பள்ளி ஆசிரியைகள்,அலுவலா்கள்,பணியாளா்கள்,பெற்றோா்கள், மாணவிகள் பாரட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com