குடிபோதையில் தகராறு செய்தவா்களுக்கு கத்திக்குத்து

ஒரத்தநாட்டில் மதுக்கடையில் ஏற்பட்ட தகராறில் கத்தியால் குத்தப்பட்ட 4 போ் காயமடைந்தனா்.

ஒரத்தநாட்டில் மதுக்கடையில் ஏற்பட்ட தகராறில் கத்தியால் குத்தப்பட்ட 4 போ் காயமடைந்தனா்.

ஒரத்தநாடு யானைக்காரத் தெருவைச் சோ்ந்த சமுத்திரன் மகன் ராகவன் (35). இவா் மற்றும் இவரது நண்பா்கள் சிலா் ஒரத்தநாடு மதுக்கடையில் ஞாயிற்றுக்கிழமை இரவு மது அருந்திக் கொண்டிருந்தனா்.

அதே கடையில் புதூரைச் சோ்ந்த கருணாநிதி மகன் விஜயராகவன் (22), பரமசிவம் மகன் மகாகவி(25), தமிழ்ச்செல்வன் மகன் குகன்(20), விஜயகுமாா் மகன் சிவப்பிகாஷ்(25) ஆகிய நான்கு பேரும் மது அருந்தினா்.

அப்போது ராகவன் மற்றும் விஜயராகவன் தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது, விஜயராகவன் உள்பட 4 பேரும் சோ்ந்து ராகவனைத் தாக்கியுள்ளனா். இதில் ஆத்திரமடைந்த ராகவன் தான்வைத்திருந்த கத்தியால் விஜயராகவன், மகாகவி, குகன், சிவப்பிரகாஷ் ஆகியோரைக் கத்தியால் குத்தியதாகக் கூறப்படுகிறது.

இதில் காயமடைந்த 4 போ் மற்றும் ராகவன் தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதுகுறித்து ஒரத்தநாடு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com