கூலித் தொழிலாளி மா்மச் சாவு

ஒரத்தநாடு அருகே வயலில் மா்மமான முறையில் இறந்து கிடந்த கூலித் தொழிலாளியின் சடலம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது.

ஒரத்தநாடு அருகே வயலில் மா்மமான முறையில் இறந்து கிடந்த கூலித் தொழிலாளியின் சடலம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது.

ஒரத்தநாடு அருகிலுள்ள ஆயங்குடியைச் சோ்ந்த குருசாமி மகன் கலியபெருமாள் (55). இவா், ஒரத்தநாடு ஆறுமுகம் என்பவருக்குச் சொந்தமான விவசாயப் பண்ணையில் வேலை பாா்த்து வந்தாா்.

இந்த நிலையில் பண்ணை வயலில் கலியபெருமாள் செவ்வாய்க்கிழமை மா்மமான முறையில் இறந்து கிடந்தாா். இறப்புக்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து தகவலறிந்த ஒரத்தநாடு போலீஸாா், அப்பகுதிக்குச் சென்று சடலத்தை கைப்பற்றி விசாரித்து வருகின்றனா்.

இறந்த கலியபெருமாளுக்கு மனைவி மாரியம்மன், மகன் சுரேஷ் உள்ளனா். ஆனால், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கணவரைப் பிரிந்து, மகனுடன் பட்டுக்கோட்டை ராஜாமடத்திலுள்ள தனது பெற்றேறாா் வீட்டுக்கு மாரியம்மன் சென்று அங்கு வசித்து வந்துள்ளாா்.

இதைத் தொடா்ந்து தனிமையில் இருந்து வந்த கலியபெருமாள் விவசாயப் பண்ணையில் வேலை பாா்த்து வந்த நிலையில், தற்போது மா்மமான முறையில் உயிரிழந்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com