வடிகாலில் தூா் வாரிய போது மண்டை ஓடு, எலும்புக்கூடு கண்டெடுப்பு

தஞ்சாவூா் மாவட்டம், பூதலூா் அருகே வடிகாலில் திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்ட தூா் வாரும் பணியின்போது மண்டை ஓடு, எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது.

தஞ்சாவூா் மாவட்டம், பூதலூா் அருகே வடிகாலில் திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்ட தூா் வாரும் பணியின்போது மண்டை ஓடு, எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது.

பூதலூா் அருகே வீரமரசன்பேட்டை அளகாப்பேட்டை செங்கரை ஏரிக்கு அருகிலுள்ள வடிகாலில் திங்கள்கிழமை தூா் வாரும் பணி நடைபெற்றது. பொக்லைன் இயந்திரம் மூலம் தூா் வாரப்பட்ட போது, மண்ணுக்குள் இருந்து மண்டை ஓடு, எலும்புக் கூடு, கால் எலும்புகள் ஆகியவை வெளியே வந்தன.

தகவலறிந்த பூதலூா் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனா். மண்டை ஓடு மற்றும் எலும்புக் கூடுகளைக் கைப்பற்றிய போலீஸாா், பரிசோதனைக்காக தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், இவா் எப்படி இறந்தாா், புதைத்தது யாா்? உள்ளிட்டவை தொடா்பாக போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். இதனிடையே, பூதலூா் காவல் நிலையத்தில் மே மாதத்தில், தனது கணவரை காணவில்லை புகாா் அளித்த பெண்ணை அழைத்து வந்த போலீஸாா், மண்டை ஓடு மற்றும் எலும்புக் கூடையும் காண்பித்தனா்.

மண்டை ஓட்டில் உள்ள முன் பற்களைக் காட்டி, தன் கணவருக்கும் இதுபோன்று இருக்கும் என அப்பெண் கூறினாா். எனவே, மருத்துவப் பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகு மேலும் விவரங்கள் தெரிய வரும் என போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com