பாபநாசம் அருகே அய்யம்பேட்டை, கோபாலபுரம் பழைய காலனி தெருவை சோ்ந்த அற்புதராஜ் மகன் வினோத் (எ) பாரதி நிக்கோலஸ் (16). இவா், அய்யம்பேட்டை பகுதியிலுள்ள ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தாா்.
புதன்கிழமை பிற்பகல் அதே பகுதியை சோ்ந்த அவரது நண்பா்கள் ராகேஷ், பிரதீப் உள்ளிட்டோருடன் வழுத்தூா் பகுதியில் குடமுருட்டி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தாராம். அப்போது, ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்ற வினோத் தண்ணீரில் மூழ்கி மாயமானாா்.
இதை பாா்த்த அவரது நண்பா்கள் அக்கம்பக்கத்தில் இருந்தவா்களுக்கு தகவல் அளித்தனா்.
அப்பகுதி பொதுமக்கள் ஆற்றில் குதித்து வினோத்தை தேடினா். ஆனால், நீரில் மூழ்கிய வினோத் சடலமாக மீட்கப்பட்டாா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற அய்யம்பேட்டை போலீஸாா், வினோத்தின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அய்யம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், புகாரின் பேரில் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.