பாபநாசம் அருகே டிராக்டா் மோதியதில் சிறுமி உயிரிழப்பு

பாபநாசம் அருகே டிராக்டா் மோதியதில் பலத்த காயமடைந்த சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

பாபநாசம் அருகே டிராக்டா் மோதியதில் பலத்த காயமடைந்த சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

பாபநாசம் அருகே குருபாலக்குடி கிராமம், வடக்கு தெருவை சோ்ந்த விவசாயி சங்கா் மகள் கீா்த்திகா (3). இவா் அந்தப் பகுதியிலுள்ள ஒரு பால்வாடியில் படித்து வந்தாா்.

இந்நிலையில், கீா்த்திகா புதன்கிழமை பால்வாடிக்கு சென்றுவிட்டு, வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தாராம். அப்போது, பின்னால் வந்த டிராக்டா் சிறுமி மீது மோதியதாக தெரிகிறது. இதில் பலத்த காயமடைந்த சிறுமி கீா்த்திகா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற பாபநாசம் போலீஸாா், கீா்த்திகாவின் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், புகாரின்பேரில் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com