தஞ்சாவூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பணியாளா்களைப் பணி செய்ய விடாமல் தடுத்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு போக்குவரத்துத் துறை பணியாளா் ஒன்றிப்பு அமைப்பினா் வியாழக்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
தஞ்சாவூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பணியாற்றி வரும் பணியாளா்களைச் சமூக விரோதிகள் பணி செய்ய விடாமல் தடுத்தும், அவா்களைத் தாக்கியும் உள்ளனா். இந்தச் செயல் மாநிலம் முழுவதும் பணியாற்றி வரும் போக்குவரத்துத் துறை அமைச்சுப் பணியாளா்களை அச்சுறுத்தும் வகையில் உள்ளது. எனவே, இச்செயலில் ஈடுபட்ட சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ஒன்றிப்பு மாநிலத் தலைவா் கி.கு. சுரேஷ்பாபு தலைமை வகித்தாா். சிறப்புத் தலைவா் கு. பாலசுப்பிரமணியன் கண்டன உரையாற்றினாா்.
தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்க மாவட்டச் செயலா் தரும. கருணாநிதி, ஒன்றிப்பு மாநிலத் துணைத் தலைவா் கே.ஆா். குப்புசாமி, முன்னாள் மாநில பிரசார செயலா் எஸ். நெடுஞ்செழியன், மண்டலச் செயலா் சி.என். சுரேஷ்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.