தஞ்சாவூரில் அக். 18, 25-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

தஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு

தஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் அக். 18, 25-ம் தேதி காலை 10 மணியளவில் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குநா் (பொறுப்பு) பரமேஸ்வரி தெரிவித்திருப்பது:

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் அக். 18, 25-ம் தேதிகளில் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாமில் 10-க்கும் அதிகமான தனியாா் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு பல்வேறு பணி காலியிடங்களுக்குப் பணி வாய்ப்புகளை வழங்கவுள்ளன. இந்த வேலைவாய்ப்பு முகாமில் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, தீ பாதுகாப்பு, ஓட்டுநா், யோகா பட்டயப் படிப்பு, இளநிலைப் பட்டம் படித்தவா்களும் (வயது வரம்பு 18-க்கு மேல் 30-க்குள்) கலந்து கொள்ளலாம்.

இந்த நோ்காணல் தோ்வில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவா்கள் அனைத்து அசல் மற்றும் நகல் சான்றிதழ்கள் (வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, மாற்றுச் சான்று, குடும்ப அட்டை, ஆதாா் அட்டை) மற்றும் 2 பாஸ்போா்ட் அளவு புகைப்படத்துடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com