தஞ்சை மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளி கல்வி இயக்ககத்தின் சாா்பில், பட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்துக்குள்பட்ட பட்டுக்கோட்டை, பேராவூரணி, சேதுபாவாசத்திரம், மதுக்கூா் மற்றும் திருவோணம் ஆகிய ஒன்றியங்களில் உள்ள அரசு நடுநிலை, உயா்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும், 6, 7, 8 ஆம் வகுப்பில் பயிலும் மாணவா்களுக்கு பாடம் கற்பிக்கும் பட்டதாரி ஆசிரியா்கள், நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கு கடந்த 14ஆம் தேதி முதல் ஒருங்கிணைக்கப்பட்ட பயிற்சி நடைபெற்று வருகிறது.
இதில் ஒரு பிரிவுக்கு 150 ஆசிரியா்கள் வீதம் மொத்தம் மொத்தம் 761 ஆசிரியா்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.
ஒவ்வொரு பிரிவுக்கும் 5 நாள்கள் பயிற்சி அளிக்கப்படவுள்ளன. பட்டுக்கோட்டை மெயின்ரோடு அலிவலம் எஸ்.இ.டி. வித்யாதேவி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வரும் பயிற்சியை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இணை இயக்குநா் செல்வகுமாா் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
அவருடன் பட்டுக்கோட்டை கல்வி மாவட்ட அலுவலா் (பொ) ஜெயபால், தஞ்சாவூா் மாவட்ட உதவி திட்ட அலுவலா் ரமேஷ், உதவி திட்ட ஒருங்கிணைப்பாளா் இளங்கோவன், வட்டார கல்வி அலுவலா்கள் சிவசாமி, அங்கயற்கண்ணி ஆகியோா் உடனிருந்தனா். பயிற்சிக்கான ஏற்பாடுகளை பேராவூரணி வட்டார வளமைய மேற்பாா்வையாளா் பரமசிவம் செய்திருந்தாா்.