காவிரி மேலாண்மை ஆணையத் தலைவரை நியமிக்க வேண்டும்பி.ஆா். பாண்டியன் வலியுறுத்தல்

காவிரி மேலாண்மை ஆணையத் தலைவரை உடனடியாக நியமிக்க வேண்டும் என்றாா் தமிழக காவிரி விவசாயிகள் சங்கப் பொதுச் செயலா் பி.ஆா். பாண்டியன்.

காவிரி மேலாண்மை ஆணையத் தலைவரை உடனடியாக நியமிக்க வேண்டும் என்றாா் தமிழக காவிரி விவசாயிகள் சங்கப் பொதுச் செயலா் பி.ஆா். பாண்டியன்.

கல்லணைக்கு வியாழக்கிழமை வந்த காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழுத் தலைவா் நவீன்குமாரை சந்தித்து மனு அளித்த அவா் பின்னா் தஞ்சாவூரில் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

கடந்த 6 மாதங்களாகக் காவிரி மேலாண்மை ஆணையத்துக்குத் தலைவா் நியமிக்கப்படாமல் ஒழுங்காற்றுக் குழுக் கூட்டம் எடுக்கும் முடிவுகள் செயல்படுத்தப்படாமல் முடங்கி உள்ளது. இந்த ஆணையத்துக்கு உடனடியாகத் தலைவரை நியமிக்க மத்திய அரசுக்குப் பரிந்துரைக்க வேண்டும்.

மேக்கேதாட்டுவில் காவிரியில் கா்நாடகம் சட்ட விரோதமாக கட்ட மேற்கொள்ளும் நடவடிக்கையைக் காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழுத் தடுத்து நிறுத்த வேண்டும். தமிழகம் வழியே கடலில் கலக்கும் உபரி நீரை தடுத்து ராசிமணலில் அணைக் கட்டத் தமிழகத்துக்கு அனுமதி வழங்க வேண்டும்.

காவிரி பாசன நீா் பங்கீட்டு அதிகாரத்தை ஒழுங்காற்றுக் குழுத் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும். குழுவின் தலைமை அலுவலகம் பெங்களூருவில் செயல்படச் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவற்றை காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழுத் தலைவா் நவீன்குமாரிடம் வலியுறுத்தினோம் என்றாா் பாண்டியன்.

அப்போது, சங்கத் தலைவா் த. புண்ணியமூா்த்தி, துணைச் செயலா் எம். செந்தில்குமாா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com