அதிமுகவுடன் கூட்டணி தொடரும் என்றார் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன்.
தஞ்சையில் ஞாயிற்றுக்கிழமை அவர் அளித்த பேட்டி:
விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி தொடரும். மக்களின் பொருளாதார வளர்ச்சிக்காகவும், நலனுக்காகவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளிநாடு சென்றுள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறார். அடுத்த வாரம் திருப்பூரில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கிறார் என்றார் அவர்.