9 இடங்களில் நாளை ரேஷன்  குறைதீர் கூட்டம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் சனிக்கிழமை (செப்.14) நடைபெறவுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் சனிக்கிழமை (செப்.14) நடைபெறவுள்ளது.
இதுகுறித்து ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தெரிவித்திருப்பது: செப்டம்பர் மாதத்துக்கான பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் சனிக்கிழமை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. (கூட்டம் நடைபெறும் வட்டம்-ரேஷன் கடை அமைந்துள்ள இடம் என்ற அடிப்படையில் விவரம்): தஞ்சாவூர்-காட்டூர், திருவையாறு- திருவையாறு - 4, ஒரத்தநாடு-பொட்டலங்குடிக்காடு, கும்பகோணம்-பாபுராஜபுரம், பாபநாசம்-கருப்பூர், திருவிடைமருதூர்-எஸ். புதூர், பட்டுக்கோட்டை-ஆத்திக்கோட்டை, பேராவூரணி-பெட்டநாச்சிவயல், பூதலூர்-சித்திரக்குடி.
இந்த நியாய விலை கடைகளில் முகாமிடும் தொடர்புடைய வட்ட வழங்கல் அலுவலரிடம் பொது விநியோகத் திட்டம் தொடர்பான குறைபாடுகள் குறித்து பொதுமக்கள் மனுக்கள் அளித்து பயன் பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com