ஒரத்தநாடு வட்டம், கருக்காடிப்பட்டி கிராமத்தில் புதன்கிழமை மக்கள் நேர்காணல் முகாம் நடைபெறுகிறது.
தஞ்சாவூர் வருவாய் கோட்ட அலுவலர் தலைமையில் நடைபெறும் முகாமில் கருக்காடிப்பட்டி , தெக்கூர், ஆதனக்கோட்டை,பாச்சூர் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் விலையில்லா வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல் , சான்றிதழ், இந்திராகாந்தி தேசிய முதியோர் உதவி தொகை திட்டம் மற்றும் அதைச் சார்ந்த ஓய்வூதியத் திட்டங்கள் மற்றும் அரசின் இதர நலத்திட்ட உதவிகளை பெற தகுதியுடைய நபர்கள் தஞ்சாவூர் வருவாய் கோட்ட அலுவலரிடம் விண்ணப்பங்களை அளிக்கலாம். ஒரத்தநாடு வட்டாச்சியர் அருள்ராஜ் இதைத் தெரிவித்தார்.