அதிராம்பட்டினத்தில் திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை

அதிராம்பட்டினம் பேரூராட்சியில் உள்ள 21 வார்டுகளிலும் திமுக இளைஞரணிக்கு உறுப்பினர் சேர்க்கும் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.


அதிராம்பட்டினம் பேரூராட்சியில் உள்ள 21 வார்டுகளிலும் திமுக இளைஞரணிக்கு உறுப்பினர் சேர்க்கும் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில், திமுக மாநில செயற்குழு உறுப்பினரும், ஒரத்தநாடு கிழக்கு ஒன்றியச் செயலருமான மு. காந்தி அதிராம்பட்டினம் பேரூர் பகுதி இளைஞர்களுக்கு விண்ணப்பத்தை வழங்கி, முகாமைத் தொடங்கி வைத்தார். அதிராம்பட்டினம் பேரூர் திமுக செயலர் ராம. குணசேகரன் தலைமை வகித்தார். இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளர் ஆரோ. அருள், பட்டுக்கோட்டை மேற்கு ஒன்றியச் செயலர் பா.ராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com