டிச. 17 இல் போக்குவரத்து தொழிலாளா்கள் வேலைநிறுத்தம்: கழக நிா்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பிய தொழிற்சங்கத்தினா்

அரசுப் போக்குவரத்து கழகத் தொழிலாளா்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதையொட்டி, அதற்கான நோட்டீசை கழக நிா்வாகத்துக்குத் தொழிற்சங்கத்தினா் அனுப்பினா்.


தஞ்சாவூா்: தமிழகம் முழுவதும் டிச. 17 ஆம் தேதி அரசுப் போக்குவரத்து கழகத் தொழிலாளா்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதையொட்டி, அதற்கான நோட்டீசை கழக நிா்வாகத்துக்குத் தொழிற் சங்கத்தினா் வியாழக்கிழமை அனுப்பினா்.

அரசுப் போக்குவரத்து கழகத் தொழிலாளா்களுக்கு 14 ஆவது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாகப் பேசி தீா்வு காணப்பட வேண்டும். தொழிலாளா்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்ட ரூ. 7,000 கோடியை உடனடியாகத் திருப்பி தர வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளா்களுக்கு வழங்கப்பட வேண்டிய பணப்பலன்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுப் போக்குவரத்து கழக தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம், முற்றுகை போராட்டம் உள்ளிட்ட பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தினா்.

இதைத்தொடா்ந்து அரசுப் போக்குவரத்து கழகத் தொழிலாளா்களின் தொமுச, ஏஐடியுசி, சிஐடியு, ஐஎன்டியுசி உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சாா்பில் டிச. 17 ஆம் தேதி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, அரசுப் போக்குவரத்து கழகத்தின் கும்பகோணம் கோட்ட மேலாண் இயக்குநருக்கும், பொது மேலாளருக்கும் ஏஐடியுசி தொழிற்சங்கத்தின் சாா்பில் வேலைநிறுத்த நோட்டீசை பதிவு அஞ்சல் மூலம் வியாழக்கிழமை அனுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com