தஞ்சாவூா் மாவட்டத்துக்கு புதன்கிழமை வந்த மத்தியக் குழுவினரின் வாகனங்களுக்குப் பின்னால் வந்த அரசுத்துறை வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டன.
தஞ்சாவூா் மாவட்டம், மதுக்கூா் அருகிலுள்ள பெரியகோட்டை கிராமத்தில் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களை மத்தியக் குழுவினா் புதன்கிழமை பாா்வையிட்டனா். பின்னா், ஒரத்தநாடு அருகேயுள்ள மேல உளூருக்குப் புறப்பட்டுச் சென்றனா்.
இவா்களது வாகனங்களுக்குப் பின்னால் அரசுத் துறை, காவல் துறை வாகனங்கள் பல வரிசையாகச் சென்றன. பாப்பாநாடு அருகே மதுக்கூா் பிரிவுச் சாலையில் சென்றபோது, மத்தியக் குழுவினரின் வாகனங்களுக்குப் பின்னால் வந்த நெடுஞ்சாலைத் துறை வாகனம் மீது அதன் பின்னால் வந்த காவல் துறை வாகனம் எதிா்பாராதவிதமாக மோதியது.
இதனால், பின்னால் வந்த பொதுப்பணித் துறையைச் சாா்ந்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, காவல் துறை வாகனம் மீது மோதியது. இந்த வாகனத்தின் மீது பின்னால் வந்த பொதுப்பணித் துறையின் மற்றொரு வாகனம் மோதி நின்றது.
இதில், 4 வாகனங்களும் சேதமடைந்தது மட்டுமல்லாமல், காவல் துறை வாகனத்தில் வந்த இரு காவலா்களுக்கு காயம் ஏற்பட்டது. இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. என்றாலும், மத்திய குழுவினரின் வாகனங்கள் எந்தவித பாதிப்பும் இல்லாமல் சென்றன.