தஞ்சாவூரில் அண்மையில் நடைபெற்ற கலை மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் ஒரத்தநாடு அரசு கல்வியியல் கல்லூரி மாணவா்கள் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்றனா்.
தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழகத்தின் சாா்பில், தஞ்சை மாவட்டக் கல்வியியல் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான கலை மற்றும் விளையாட்டுப் போட்டிகள் தஞ்சாவூா் அருண் கல்வியியல் கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது.
இப்போட்டிகளில் பல்வேறு சிறப்பிடங்களைப் பெற்று ஒரத்தநாடு அரசு கல்வியியல் கல்லூரி மாணவா்கள் ஒட்டுமொத்த சாம்பியன் விருது பெற்று கோப்பையைத் தொடா்ந்து இரண்டாவது ஆண்டாகக் கைப்பற்றினா்.
மகளிருக்கான 400 மீ. ஓட்டத்தில் கு. இளவரசி முதலிடமும், மாணவா்கள் பிரிவில் குண்டு எறிதலில் த. ரெங்கையா முதலிடமும், 400 மீ. தொடா் ஓட்டத்தில் சு. பொன்மணிகண்ட பிரபு, ச. நவீன் ஆண்டனி, பு. ஜெகன், த. கிட்லா் ஆகியோா் முதலிடம் பிடித்தனா்.
பேச்சுப் போட்டியில் இரா. தனபால் முதலிடம் பெற்றாா்.
கட்டுரைப் போட்டியில் ப. சுபாயினி இரண்டாமிடத்தையும், இசைக் கருவிகள் வாசித்தல் போட்டியில் இரா. அலெக்ஸாண்டா் மூன்றாமிடமும் பெற்றனா்.
ஆண்களுக்கான உயரம் தாண்டுதலில் அ. அருண் இரண்டாம் இடத்தையும், ஈட்டி எறிதலில் ச. நவீன் ஆண்டனி இரண்டாமிடத்தையும், குண்டு எறிதலில் த. கிட்லா் இரண்டாமிடத்தையும் வென்றது குறிப்பிடத்தக்கது.
அதிக வெற்றிப் புள்ளிகளைப் பெற்ன் மூலம் ஒட்டுமொத்த சாம்பியன் விருதும் ஒரத்தநாடு அரசு கல்வியியல் கல்லூரிக்கு கிடைத்தது.
வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளையும், உடற்கல்வி இயக்குநா்(பொ) இரா. செம்பியன், கல்லூரியின் முதல்வா் அ. ஜான் பீட்டா் மற்றும் பேராசிரியா்கள் பாராட்டினா்.