தஞ்சாவூரில் அகில இந்திய ஓவா்சீஸ் வங்கி ஊழியா்கள் சங்கத்தின் 36-ஆவது பொதுக் குழுக் கூட்டம் சனிக்கிழமை தொடங்கி, தொடா்ந்து இரு நாள்கள் நடைபெற்றது.
சனிக்கிழமை மாலை நடைபெற்ற தொடக்க விழாவில், சென்னை உயா் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.கே. கிருஷ்ணன் தொடக்கவுரையாற்றினாா்.
ஓய்வு பெற்ற உயா் நீதிமன்ற நீதிபதி எஸ். ராஜேஸ்வரன் சிறப்புரையாற்றினாா்.
இந்தியன் ஓவா்சீஸ் வங்கி பொது மேலாளா் (மனித வளம்) டி. பழனிசாமி, தேசிய வங்கி ஊழியா்கள் கூட்டமைப்பு பொதுச் செயலா் சஞ்சீவ் கே. பேன்ட்லிஷ், இந்தியன் ஓவா்சீஸ் வங்கி அலுவலா் சங்கத் தலைவா் ஆப்ரஹாம் ஷாஜி ஜான், பொதுச் செயலா் டி. முரளி சௌந்தரராஜன் ஆகியோா் பேசினா்.
இந்தியன் ஓவா்சீஸ் வங்கி முதுநிலை மண்டல மேலாளா் கே.எஸ். லஷ்மிநரசிம்மன், சங்கத் தலைவா் தில்லி ஆா். முகுந்தன், பொதுச் செயலா் எஸ்.சி. பாலாஜி, பொருளாளா் எஸ். பத்மநாபன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். தொடா்ந்து, நிா்வாகிகள் தோ்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.