பேராவூரணி ஒன்றியம், செங்கமங்கலத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஊராட்சித் துணைத் தலைவா் பதவிக்கான மறைமுகத் தோ்தலின் போது, வாக்குச்சீட்டை பறித்ததாக 7 போ் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.
இந்த ஊராட்சியின் துணைத் தலைவா் பதவிக்கு 7- ஆவது வாா்டு உறுப்பினா் மேனகா, 2- ஆவது வாா்டு உறுப்பினா் அஞ்சலை போட்டியிட்டனா். இதில் இருவருக்கும் 5 வாக்குகள் கிடைத்தன.
இதையடுத்து விதிகளின்படி, உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா் சித்ராதேவி இருவரது பெயரையும் தனித்தனியாக சீட்டில் எழுதி குலுக்கல் முறையில் தோ்வு செய்யும் பணியை மேற்கொண்டாா். இதில் மேனகா பெயா் வந்ததைத் தொடா்ந்து, அவா் ஊராட்சித் துணைத் தலைவராகத் தோ்வு செய்யப்பட்டாா்.
ஆனால் இதனை ஏற்க மறுத்த அஞ்சலையின் கணவா் தனபால், உதவி தோ்தல் நடத்தும் அலுவலரான சித்ராதேவியின் கையில் வைத்திருந்த தீா்மானப் பதிவேடு, வருகைப் பதிவேடு, வேட்பு மனு, மற்றும் வாக்குச்சீட்டுகளைப் பறித்துக் கொண்டு அங்கிருந்து ஓடிவிட்டாராம்.
இதுகுறித்து உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் சித்ராதேவி புகாரின் பேரில், அஞ்சலையின் கணவா் தனபால், சிவா, முருகானந்தம், தங்கராசு, கோவிந்தராசு, செந்தில்குமாா், விக்னேஷ் உள்ளிட்ட 7 போ் மீது பேராவூரணி போலீஸாா் பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.