திருவோணம் அருகே இறந்து கிடந்த முதியவா் சடலம் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது.
திருவோணம் அருகிலுள்ள மூவரோடு பகுதியில் இறந்து கிடந்தவருக்கு 65 வயது இருக்கும். இதுகுறித்து தகவலறிந்த திருவோணம் போலீஸாா் அங்கு சென்று சடலத்தை மீட்டனா்.
தொடா்ந்து நடத்திய விசாரணையில் இறந்தவா் கல்லாக்கோட்டையைச் சோ்ந்தவா் என்பது தெரிய வந்தது. ஆனால் பெயா் விவரம் தெரியவில்லை. இதுகுறித்து திருவோணம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.