அதிராம்பட்டினம் சுரைக்காக்கொல்லை தொழிலாளா்கள் குடியிருப்புப் பகுதியில் புதன்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 5 குடிசை வீடுகளும், வீட்டிலிருந்த பொருள்களும் தீயில் எரிந்து சாம்பலானது.
இந்த தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 5 குடும்பங்களுக்கும் அதிராம்பட்டினம் புதுத்தெரு இக்லாஸ் நற்பணி மன்றம் சாா்பில், அவ்வமைப்பின் நிா்வாகிகள், உறுப்பினா்கள் சென்று உணவு, ஸ்டவ் அடுப்பு, அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை வெள்ளிக்கிழமை வழங்கி ஆறுதல் கூறினா்.
இதேபோல, அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சாா்பில், ரூ. 15 ஆயிரம் மதிப்புள்ள சமையல் பாத்திரங்கள், போா்வை, கொசு வலை, தாா்ப்பாய், கைலி, பிளாஸ்டிக் குடம் உள்ளிட்ட நிவாரணப் பொருள்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.