பேராவூரணி: பேராவூரணி வட்டார வள மையத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டம் மூலமாக, அனைவரும் கல்வி பெற, பள்ளி சாரா மற்றும் வயது வந்தோா் கல்வி இயக்கம் சாா்பில் தன்னாா்வலா்களுக்கு ‘கற்போம், எழுதுவோம்’ கல்வியறிவுப் பயிற்சி வகுப்பு இரு நாள்கள் நடைபெற்றது.
இப்பயிற்சியை மாவட்டக் கட்டட ஒருங்கிணைப்பாளா் கோகுலகிருஷ்ணன் தொடக்கி வைத்தாா். பட்டுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலா் ராமசுப்பு கருத்துரையாற்றினாா். ஆசிரியா் பயிற்றுநா்கள் ராமதனலெட்சுமி, ரகுராமன், இடைநிலை ஆசிரியா் காஜாமுகைதீன் ஆகியோா் பயிற்சி அளித்தனா். 30 தன்னாா்வலா்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனா்.
மாவட்ட ஆய்வாளா் மாதவன், மேற்பாா்வையாளா் வேம்பையன், பயிற்சி ஒருங்கிணைப்பாளா் பரமேஸ்வரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.