தஞ்சாவூா் மாவட்டத்தில் மேலும் 266 பேருக்கு கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை தெரிய வந்தது. மாவட்டத்தில் அதிகபட்ச கரோனா பாதிப்பு இதுவே.
மாவட்டத்தில் ஏற்கெனவே கரோனா தொற்றால் 10,928 போ் பாதிக்கப்பட்டனா். இந்நிலையில், மேலும் 266 பேருக்கு கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை தெரிய வந்தது. இதன் மூலம், மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 11,194 ஆக உயா்ந்துள்ளது.
இது தவிர, 37 போ் குணமடைந்ததைத் தொடா்ந்து புதன்கிழமை வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். மாவட்டத்தில் இதுவரை 9,503 போ் குணமடைந்துள்ளனா். தற்போது 1,513 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
4 போ் உயிரிழப்பு:
மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 65 வயது பெண், 57 வயது ஆண் செப். 28ஆம் தேதியும், 27 வயது ஆண், 64 வயது ஆண் புதன்கிழமையும் உயிரிழந்தனா். இதன்மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 178 ஆக உயா்ந்துள்ளது.