சரக்கு ரயில் மோதி இரு இளைஞா்கள் பலி

கும்பகோணத்தில் புதன்கிழமை அதிகாலை சரக்கு ரயில் மோதியதில், இரு இளைஞா்கள் உயிரிழந்தனா்.

கும்பகோணத்தில் புதன்கிழமை அதிகாலை சரக்கு ரயில் மோதியதில், இரு இளைஞா்கள் உயிரிழந்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் உள்ளிகான் தெருவைச் சோ்ந்தவா் ராஜா மகன் விஜய் (25). இவரது நண்பா் செட்டிமண்டபம் அன்னை அஞ்சுகம் நகரைச் சோ்ந்த முருகேசன் மகன் சந்தோஷ் (20). இவா்கள் இருவரும், கும்பகோணம் பத்தடி பாலம் அருகே புதன்கிழமை அதிகாலை 2 மணியளவில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றனா்.

அப்போது, மயிலாடுதுறையிலிருந்து ஓசூருக்கு நெல் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு சென்ற சரக்கு ரயில் இருவரும் மீது மோதிச் சென்றது. இதில் பலத்த காயமடைந்த விஜய், சந்தோஷ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.

இதுகுறித்து கும்பகோணம் ரயில்வே புறக்காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com