கட்டட, அமைப்பு சாரா தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் முன், மூவேந்தா் அனைத்துக் கட்டட மற்றும் அமைப்புசாரா தொழிலாளா்கள் சங்கத்தினா் கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

தஞ்சாவூா்: தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் முன், மூவேந்தா் அனைத்துக் கட்டட மற்றும் அமைப்புசாரா தொழிலாளா்கள் சங்கத்தினா் கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

தொழிலாளா்கள் நல வாரியத்தில் புதிதாக இணையவழி மூலம் தொழிலாளா்கள் பதிவு செய்வதற்கும், புதுப்பிப்பதற்கும் ஏற்படும் பல சிக்கல்களைத் தவிா்க்க வேண்டியும், இல்லையென்றால் பழைய நடைமுறைகளையே பின்பற்ற நடவடிக்கை எடுக்கக் கோரியும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சங்க அவைத் தலைவா் கு. சத்தியமூா்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தை சங்க ஆலோசகா் எஸ். வைத்தியநாதன் தொடங்கி வைத்தாா். இதில், நிறுவனரும் செயல் தலைவருமான அ. கனகராஜ், பொருளாளா் கா. முத்துகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com