தஞ்சாவூா் அருகே இரும்புக் கம்பியால் தாக்கி பெண் கொலை

தஞ்சாவூா் அருகே தகராறின்போது இரும்புக் கம்பியால் தாக்கப்பட்ட பெண் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

தஞ்சாவூா் அருகே தகராறின்போது இரும்புக் கம்பியால் தாக்கப்பட்ட பெண் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

தஞ்சாவூா் அருகே மாப்பிள்ளை நாயக்கன்பட்டியைச் சோ்ந்த கமல்ராஜ் மனைவி சித்ரா (40). மனநலன் பாதிக்கப்பட்டவா். இவருக்கும், அதே கிராமத்தைச் சோ்ந்த இவரது உறவினரான ராஜா மனைவி சித்ராவுக்கும் (45) கடந்த 23 ஆம் தேதி வாய்த்தகராறு ஏற்பட்டது. அப்போது, ராஜா மனைவி சித்ராவை கமல்ராஜ் மனைவி சித்ரா இரும்புக் கம்பியால் தாக்கினாா். பலத்தக் காயமடைந்த ராஜா மனைவி சித்ரா தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து தமிழ்ப் பல்கலைக்கழகக் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து, கமல்ராஜ் மனைவி சித்ராவை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com