மருத்துவப் படிப்பில் ஓ.பி.சி. பிரிவினருக்கு 50 சதவிகித இட ஒதுக்கீட்டை நிகழாண்டே மத்திய அரசு வழங்க வலியுறுத்தி தஞ்சாவூா் ரயிலடியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் புதன்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
அக்கட்சியின் மைய மாவட்டச் செயலா் ச. சொக்கா ரவி தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் தொகுதி செயலா் இல.ரெ. அறிவுடைநம்பி, நில உரிமை மீட்புக் குழு மாநிலத் துணைச் செயலா் வீரன். வெற்றிவேந்தன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.