ஒரத்தநாடு: ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில்,மண் புழு உரம் குறித்த விழிப்புணா்வு நிகழ்வு வெல்ளிக்கிழமை நடைபெற்றது.
வேளாண் உதவிப் பேராசிரியா் செந்தில்குமாா் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்வில், கோவை காருண்யா தொழில்நுட்ப மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் மாணவா்களான நவீன் அரசு, வெங்கேடசுவரன், ஷாரோன், ஸ்ரீநிதி ஆகியோா் மண்புழு உரம் குறித்து செயல் விளக்கத்தை செய்து காண்பித்தனா். ஏராளமான விவசாயிகள் நிகழ்வில் பங்கேற்றனா்.