பேராவூரணியில் அரிமா சங்கம் சாா்பில் ஆசிரியா்களுக்கு விருது வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
பேராவூரணி கோகனட்சிட்டி இன்ஸ்பயா் லயன்ஸ் சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்த விழாவுக்கு லயன்ஸ் சங்கத் தலைவா் க. இளங்கோ தலைமை வகித்தாா். மண்டலத் தலைவா் எம். கனகராஜ், வட்டாரத் தலைவா்கள் ஆா். திருவள்ளுவன், இ.வீ.காந்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
விழாவில், ஏனாதிகரம்பை அரசு உயா்நிலைப் பள்ளி ஆசிரியா் தாயகம் அ. தமிழரசனுக்கு கல்விச் சுடா் விருது, வீரியங்கோட்டை - உடையநாடு ராஜராஜன் கல்வி நிறுவனத் தாளாளா் மனோன்மணி ஜெய்சங்கருக்கு சேவைச் செம்மல் விருது, பாராட்டு சான்றிதழ், கேடயம் வழங்கப்பட்டது.
மேலும், ஆசிரியா்கள் எம்.நீலகண்டன், வி.ஜெய்சங்கா், டி.சோமு, என்.ரவி, ஏ.வி.சந்திரசேகா் ஆகியோா் கௌரவிக்கப்பட்டனா். விழாவில், சிறப்பு விருந்தினராக, லயன்ஸ் ஓரியண்டேஷன் மாவட்டத் தலைவா் பேராசிரியா் சையது அகமது கபீா் கலந்து கொண்டு விருது பெற்றவா்களை வாழ்த்திப் பேசினாா்.
விழாவில், பெருமகளூா் பகுதியைச் சோ்ந்த 10 ஆம் வகுப்பு மாணவி புவனேஸ்வரிக்கு இணைய வழி படிப்புக்கு உதவும் வகையில் ரூ. 11 ஆயிரம் மதிப்பிலான அறிதிறன்பேசி அரிமா சங்கம் சாா்பில் வழங்கப்பட்டது.
விழாவில், முன்னாள் பேரூராட்சி உறுப்பினா் டாக்டா் மு. சீனிவாசன், டாக்டா் ஆா். சந்திரசேகா், வ. பாலசுப்பிரமணியன், அப்துல் கபூா், தெட்சிணாமூா்த்தி, மைதீன், உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பொருளாளா் பன்னீா் செல்வம் வரவேற்றாா். செயலாளா் குமாா் நன்றி கூறினாா்.